Monday, July 16, 2012

Kovil Mandapam Constructions Invitation: திருப்பணி வேண்டுகோள்




நம் திருக்கோவிலில் முன்மண்டபம் கட்டுமானப்பணிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பெரியதிருவரங்கம் இராமானுஜக்கூடத்தின் 50ஆவது பீடாதிபதி ரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகள் மங்களாசாசனம் செய்து அடிக்கல் நாட்டினார்கள்.தற்போது அப்பணி தொடங்கப்பட்டுள்ளது.இத்துடன் கருடாழ்வார்,ஆண்டாள் நாச்சியார்,கிருஷ்ணன் திருவுருவங்கள்,மடப்பள்ளி ஆகியவை உருவாக்கும் திருப்பணியும் நடக்கின்றன.இத் தெய்வங்களின் திருவுருவங்கள் தற்போது சிமெண்டில் செய்யப்பட்டுள்ளன.இவை சிதிலமடைந்து விட்டன.இதனால் இவற்றை கற்களினால் உருவாக்கி பிரதிஷ்டை செய்து இவற்றிற்கு இரும்பு கம்பித் தடுப்புகளும் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.இத்திருப்பணிக்கு உதவ விருப்பமுள்ளோர் கோவில் தலைவர் ஆர்.விஜயகுமாரையோ (செல்:98425-63953) அல்லது செயலாளர் ஆர்.ஆறுமுகத்தையோ (94434-72753) தொடர்பு கொள்ளலாம்.

முன்மண்டபம் கட்டுமான திருப்பணி: இக்கட்டுமானப் பணிகளுக்கான பாலாலய பூஜை 15.7.2012 அன்று கோவிலில் நடந்தது.தீர்த்த கலசங்களுக்கு சிறப்புப் பூஜை.வேள்வி,சக்தியை கண்ணாடியில் ஏற்றுதல், சிறப்புத் திருமஞ்சனம் ஆகியன நடத்தப் பெற்றன.குலப்பெரியோர்கள் ரங்கசாமி,தங்கராஜ் ஆகியோர் தலைமையில் வீரபாண்டி வரதாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார்.நடூர்,பெ.நா.பாளையம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.