Monday, October 22, 2012

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா 2012

 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா 
13.10.2012

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி காளிபாளையத்தில் உள்ள நம் குல தெய்வமான ஶ்ரீதேவி பூதேவி நாச்சியார் ஸமேத ஶ்ரீதிருமலைராயபெருமாள் திருக்கோவிலில் நடந்த விழாவிற்கு ஊர்கவுண்டர் தங்கவேலு தலைமை வகித்தார்.கோவில் கமிட்டி செயலாளர் ஆர்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.திருப்பள்ளியழுச்சியுடன் தொடங்கிய இதில் தொடர்ந்து மேட்டுப்பாளையம் நடூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்ட பிருந்தாவன பஜனை செய்தனர்.பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு பன்னிருவகை திரவியங்களுடன் திருமஞ்சனம் நடந்தது.பின்னர் நாலாயிர திவ்யப்பிரபந்த சேவிப்பும்,விஷ்ணு சஹஸ்ரநாம பாராயாணமும் நடந்தது.இதனையடுத்து துளசி மற்றும் வில்வ மாலைகளுடன் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.தொடர்ந்து அன்னதானம் நடந்தது.இவ்விழாவில் கர்நாடகா,கேரளா மாநிலங்கள் மற்றும் கோவை,நீலகிரி,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


























 

                                                                             

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா (13.10.2012)


 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா 
13.10.2012



புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை விழா