Tuesday, January 28, 2014

ராமர் பஜனைகுழு பாதயாத்திரைக்கு வரவேற்பு- 26.1.2014

எண்.4 வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் உள்ள ஶ்ரீராமர் பஜனைக்குழுவினர் கடந்த 32 வருடங்களாக கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் அருகிலுள்ள ஶ்ரீ கோமாளி அரங்கன் கோவிலுக்கு பஜனை பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.வழக்கம்போல் 26.1.2014 அன்று பாதயாத்திரை உற்சவம் நடந்தது.இவர்களுக்கு கோவிலின் சார்பில் சடகோபனின் ஆராதனையும் வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவில் சிறப்பு திருவாராதனைகள் செய்யப்பட்டதுடன் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டன.





முன்மண்டப கட்டுமானப்பணி கதவு நிளவு வைப்பதற்காக ....






நமது கோவிலின் முன்மண்டப கட்டுமானப்பணியின் போது கதவிற்கன நிளவு வைப்பதற்காக நடந்த நிகழ்வுகள்,குட்டையூர்,பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுப்பாளையம் பங்காளிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.இந்த கதவினை மேட்டுப்பாளையம் பங்காளிகள் உபயமாகத் தந்துள்ளனர்.

 
                                                                             
       

புரட்டாசி கடைசி வார திருவிழா-2014












இவ்விழாவில் வழக்கம்போல் பெருமாளுக்கு சிறப்பான திருவாராதனைகள் நடந்தன.கர்நாடகா மாநிலத்திலிருந்து புதிய பங்காளிகள் வந்திருந்தனர்.ஏறத்தாழ 350 க்கும் மேற்பட்ட நமது குல குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.