Friday, October 3, 2014

புரட்டாசி கடைசி சனிக்கிழமை வாரவிழா 18.10.2014 (ஐப்பசி- 1)

அன்புடையீர், வணக்கம்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகில் காளிபாளையத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திருமலைராய பெருமாள் நமது பயிடு கொத்தார் குலத்தாரின் குலதெய்வமாகும். நம் கோவிலின் இந்த ஆண்டு (2014) புரட்டாசி கடைசி சனிக்கிழமை வாரப் பெருவிழா வரும் 18.10.2014 (ஐப்பசி-1) அன்று கீழ்கண்ட முறையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த கடைசி வார விழா குறித்து உங்கள் ஊரில் உள்ள நம்முடைய மற்ற தாயாதிகளுக்கு தகவல் தெரிவித்து குடும்பத்துடன் வர செய்ய வேண்டும். மேலும் தாங்களும் தவறாது குடும்பத்துடன் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும்.விருப்பமுள்ளவர்கள் இவ்விழா நன்றாக நடப்பதற்கு பூஜை பொருட்களோ அல்லது நிதியையோ நன்கொடையாக வழங்கலாம்.