Kaalipalayam (Payidu Kotthar Kula Theivam - Arunthathiar Community) Near Periyanaickenpalayam, Tamil Nadu, Coimbatore 641 020. Temple History
Thursday, November 27, 2014
காளிபாளையத்தில் ஶ்ரீ திருமலைராயப் பெருமாள் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழா பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள பகிடி கத்துலு குலத்தாரின் குலதெய்வமான ஶ்ரீதவி பூதேவி சமேத ஶ்ரீதிருமலைராயப் பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி வார விழா மிகச்சிறப்பாக நடந்தது.திருவாய்மொழி சேவா காலத்துடன் பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து உற்சவருக்கு பன்னி்ரு வகை அபிஷேகமும்,சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டன.இதற்கு கோவில் தலைவர் இரா.விஜயகுமார்,செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.குலப்பெரியவர்கள் முன்னின்று பூஜைகளை நடத்திக் கொடுத்தனர்.ஏராளமான பங்காளிகள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை அளித்தனர்.விழாவில் கோவில் வரவு செலவு காண்பிக்கப்பட்டது.சிறப்பு கட்டளைதாரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.பின்னர் நடந்த அன்னதானம் நடந்தது.விழாவில் கோவை,நீலகிரி,ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரளா,கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)